2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொள்வனவுக் குழுக்களின் அதிகார எல்லைகளை திருத்துதல் - பொதுமக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்கும் பல கருத்திட்டங்களை 2021 - 2023 நடுத்தவணைகால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் நடைமுறைப்படுத்தும் பொருட்டு தேவையான நிதி ஏற்பாடுகளை வழங்குவதற்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் நடைமுறையிலுள்ள ஒப்பந்தங்களை வழங்கும் அதிகார எல்லைகளை நெடுஞ்சாலைகள் அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, நீர்வழங்கல் அமைச்சு, மின்சக்தி அமைச்சு , துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் விடயநோக்கெல்லைகளுக்கு உரியதாக அதிகரிக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |