2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீதித்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் மூன்று (03) வருட கால திட்டம் - இலங்கையில் நீதியை நிலைநாட்டும் பொறிமுறையில் காணப்படும் அசாதாரண காலதாமதம் நாட்டில் சட்ட ஆட்சியினை உறுதி செய்வதற்கு சவாலாக உள்ளது. சர்வதேச சுட்டெண்கள் பெரும்பாலானவற்றில் இந்த நிலைமை எடுத்துக் காட்டப்பட்டுள்ளதோடு, இது வௌிநாட்டு முதலீடுகளின்பால் நேரடியாக தாக்கத்தைச் செலுத்துகின்றது. இந்த பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நீதித்துறைக்கு போதுமான மனித மற்றும் பௌதிக வளங்களை வழங்குதல், புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துதல், பிரச்சினைகளை தீர்க்கும் மாற்று பொறிமுறையை பலப்படுத்துதல், தேவையான சட்ட மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்துதல் போன்றவை அத்தியாவசி யமானதாகும். இதற்கிணங்க நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்யும் மூன்று (03) வருட கால திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 2021 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் 20,000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஏற்பாட்டினை பயன்படுத்தி தெரிவுசெய்யப்பட்ட ஆறு (06) துறையின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |