• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் இறப்பர் செய்கை மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் அபிவிருத்திக்காக குழுவொன்றைத் தாபித்தல்
- எழுந்துள்ள COVID - 19 தொற்றுநிலைமையின் கீழ் இறப்பர் பயன்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்படும் கையுறைகள் அடங்கலாக ஏனைய சுகாதார பாதுகாப்பு உபகரணங்களுக்கான உலகளாவிய கேள்வி அதிகரித்துள்ளதோடு, நாட்டின் இறப்பர் சார்ந்த உற்பத்திகளுக்குத் தேவையான இறப்பர் பாலை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் தேவை தேசிய ரீதியில் எழுந்துள்ளது. இதன் பொருட்டு பதனிடப்படாத இறப்பர் பால் உற்பத்தி அதேபோன்று இறப்பர் உற்பத்தி தொழில் என்பவற்றில் நேரடியாக தொடர்புபட்டுள்ள அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உள்நாட்டு இறப்பர் துறையை ஊக்குவித்து செய்கையாளர்களையும் கைத்தொழிலாளர்களையும் இணைத்து செயற்படும் ஒருங்கிணைப்பு குழுவொன்றை நியமிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இலங்கையின் இறப்பர் துறையின் சங்கிலித் தொடரை சிறந்த செயற்பாட்டுடன் தொடர்ந்தும் பேணுவதற்கும் நிலவும் பிரச்சினைகளை கலந்துரையாடி தீர்த்துக் கொள்வதற்கும் கொள்கை ரீதியிலான சிபாரிசுகளை அரசாங்கத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளரின் தலைமையில் ஏனைய உரிய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி 'இறப்பர் செய்கை மற்றும் அதுசார்ந்த கைத்தொழில் அபிவிருத்தியின் பொருட்டு நிறுவனங்களுக் கிடையிலான ஒருங்கிணைப்பு குழு' என்னும் குழுவொன்றைத் தாபிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.