• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல்' நிறுவனத்தை 'தேசிய அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல்' நிறுவனம் என பெயரிடுதல்
- அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல் நிறுவனமானது அழிவு எதிர்ப்பு பரிசோதனை பயிற்சிகள் மற்றும் பரிசோதனை சேவைகளை மேம்படுத்துகின்றதோடு, சர்வதேச தரங்களுக்கு அமைவாக அழிவு எதிர்ப்பு பரிசோதனை தகைமைகள் மற்றும் ஆளணி சான்றுபடுத்தல் சார்பில் இலங்கை அணுசக்தி சபையின் கீழ் சுயாதீன நிறுவனமொன்றாக செயலாற்றுகின்றது. அழிவு எதிர்ப்பு பரிசோதனை பயிற்சிகள் மற்றும் சான்றுபடுத்தலின் பொருட்டு சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு சகல நாடுகளும் அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல் தேசிய நிறுவனமொன்றினைத் தாபித்தல் வேண்டும். இதற்கிணங்க, ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ள 'அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல்' நிறுவனத்தின் பெயரை 'தேசிய அழிவு எதிர்ப்பு பரிசோதனை சான்றுபடுத்தல்' நிறுவனம் என மாற்றுவதற்காக மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.