• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான தற்காலிக தங்குமிடங்களின் நிருவாகம்
- துன்புறுத்தல்களினால் பாதிக்கப்படுகின்ற பெண்களுக்கும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் தற்காலிக பாதுகாப்பை வழங்கும் பொருட்டு வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் சப்பிரகமுவ மாகாணங்களில் தற்காலிக பெண்கள் தங்குமிடங்கள் தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய இடங்களில் அமைந்துள்ள தங்குமிடங்களின் நிருவாக பணிகளை நடாத்திச் செல்வதற்கு 2018 ஆம் ஆண்டிலிருந்து Women In Need (WIN) மற்றும் Jaffna Social Action Center (JSAC) போன்ற அரசசார்பற்ற அமைப்புகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டிலும் உரிய தங்குமிடங்களின் நிருவாக பணிகளை நடாத்திச் செல்வதற்கு தொடர்ந்தும் இந்த அரசசார்பற்ற அமைப்புகளின் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.