2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிருவாக உதவி பற்றிய ஒப்பந்தம் - சுங்க நடவடிக்கைகள் தொடர்பிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிருவாக உதவி தொடர்பில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா அடங்கலாக தெரிவுசெய்யப்பட்ட வர்த்தக கூட்டு நாடுகள் பலவற்றுடன் இலங்கை ஏற்கனவே ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளது. வௌிப்படைத் தன்மைவாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைமுறைகள் ஊடாக சட்டபூர்வமான வர்த்தகங்களுக்கு வசதிகளை செய்தல், இருநாடுகளுக்கிடையில் வர்த்தகம் சார்ந்த செலவுகளை குறைத்தல் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் போன்றவற்றை நோக்காகக் கொண்டு இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையில் இத்தகைய ஒப்பந்தமொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இரு தரப்பிற்கும் இடையில் உரிய உடன்படிக்கையை கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |