2021-03-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2015‑01‑14 ஆம் திகதியிலிருந்து 2018‑12‑31 ஆம் திகதிவரையிலான காலப்பகுதிக்குள் அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் பற்றி ஆராய்ந்த சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் - 2019 சனவரி மாதம் 14 ஆம் திகதி சனாதிபதி அவர்களின் கட்டளையின் பிரகாரம் இளைப்பாறிய உயர் நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட மேற்போந்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை முன்னாள் சனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |