• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பறிமுதல் செய்யப்பட்ட மண் மற்றும் மரங்களை அப்புறப்படுத்தும் செயற்பாடு
- நாடுமுழுவதுமுள்ள நீதிமன்றங்களினால் பறிமுதல் செய்யப்பட்ட மண் மற்றும் மரங்களை மத வழிபாட்டு தலங்களின் நிர்மாணிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக சலுகை விலையில் வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டதோடு, இந்த அங்கீகாரமானது 2020‑12‑31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையிலுள்ள வழிமுறையினை திருத்தி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.