2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
களுத்துறை கைத்தொழில் பேட்டையை விரிவுபடுத்துதல் - களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவில் "புலர்ட்டன் வத்த" என்னும் காணியின் 50 ஏக்கரில் களுத்துறை கைத்தொழில் பேட்டையானது நடாத்திச் செல்லப்படுகின்றதோடு, ஏற்கனவே 33 முதலீட்டாளர்கள் கைத்தொழிற்சாலைகளை ஆரம்பித்து வர்த்தக உற்பத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முதலீட்டாளர்களினால் சுமார் 837 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதோடு, சுமார் 775 தொழில்வாய்ப்புகளும்கூட உருவாக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்திருக்கின்ற போதிலும் அவர்களுக்கு வழங்குவதற்கு காணித்துண்டுகள் மேல் மாகாணத்தில் செயற்படுத்தப்பட்டுள்ள 08 கைத்தொழில் பேட்டைகளிலும் எஞ்சியில்லை. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு களுத்துறை கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையில் அமைந்துள்ள 1.946 ஹெக்டாயர் அரசாங்க காணித் துண்டை களுத்துறை கைத்தொழில் பேட்டையை விரிவுபடுத்துவதற்காக ஒதுக்குவதற்கும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை செய்ததன் பின்னர் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கைத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்குமாக கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |