• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச அம்பாந்தோட்டை யானை முகாமைத்துவ ஒதுக்கத்தை பிரகடனப்படுத்தல்
- அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் துரித அபிவிருத்தி கருத்திட்டங்களின் போது காட்டு யானைகள் அடங்கலாக ஏனைய வனசீவராசிகளின் இருப்பிடம் மற்றும் இடமாறல் பாதைகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. இந்த நிலைமை காரணமாக குறித்த பிரதேசங்களில் மனித யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதோடு, இதற்கு மாற்று வழியாக யானைகளின் இடமாறல் பாதைகள் அமைந்துள்ள விதம் பற்றி ஆராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டு காட்டு யானைகள் உட்பட ஏனைய சீவராசிகளுக்கான யானை முகாமைத்துவ ஒதுக்கிடமொன்றை பிரகடனப்படுத்துவதற்கு வனசீவராசிகள் திணைக்களத்தினால் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்கும் இலங்கை மகாவலி அதிகாரசபைக்கும் சொந்தமான 23,746.55 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி உத்தேச ஒதுக்கத்திற்காக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க தேவையான வழிகாட்டல்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலானது வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினதும் இலங்கை மகாவலி அதிகாரசபையினதும் உடன்பாட்டின் மீது வரையப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு சட்டவரைநரின் உடன்பாட்டினை பெற்றுக் கொண்டுதன் பின்னர் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு நீர்ப்பாசன அமைச்சரும் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரும் சமர்ப்பித்த கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.