• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முதலீடுகளை துரிதப்படுத்துதல்
- அண்மையில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அக்கறை காட்டியுள்ளனர். ஆயினும் இத்தகைய முதலீட்டாளர்களுக்கு வசதிகளை செய்வதற்கு நடைமுறையிலுள்ள வழிமுறையானது நீண்ட செயற்பாட்டினைக் கொண்டுள்ளதன் காரணமாக முதலீட்டாளரின் ஆர்வத்தின்மீது இலங்கையின் முதலீடு சார்ந்த அதிகாரிகளின் ஊடாக கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமையின் கீழ் இத்தகைய முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மிகவும் முறைப்படுத்தப்பட்ட வழிமுறையொன்றினைத் தாபிக்கும் அவசரத் தேவை அரசாங்கத்தினால் இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால் "அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட முதலீட்டு முகாமைத்துவ குழு" என்னும் பெயரில் திறைசேரி செயலாளரின் தலைமையில் உரிய அமைச்சுக்களின் செயலாளர்களினதும் முதலீட்டுச் சபையின் தலைவரினதும் பங்களிப்புடன் குழுவொன்றை நியமிப்பதற்கும் முதலீட்டு பிரேரிப்புகளுக்கு துரிதமாக அங்கீகாரத்தினை வழங்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கும் பொறுப்பினை இந்தக் குழுவுக்கு கையளிப்பதற்குமாக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.