• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2021 நிதி ஆண்டிற்கான நிதி ஆணைக்குழுவின் சிபாரிசுகள்
- அரசியலமைப்பின் 154ண ஆம் உறுப்புரையின் பிரகாரம் தாபிக்கப்பட்டுள்ள நிதி ஆணைக்குழுவினால் மாகாண சபைகளுக்கு வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நிதிகளை பங்கிடும் போது பின்பற்றவேண்டிய நெறிகள் பற்றி அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு சிபாரிசுகளைச் செய்தல் வேண்டும். இதற்கிணங்க நிதி ஆணைக்குழுவானது 2021 நிதி ஆண்டிற்கான சிபாரிசுகளை அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பித்துள்ளது. நிதி ஆணைக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள குறித்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்து வதற்கும் அரசியலமைப்பின் 154ண(7) ஆம் உறுப்புரையின் பிரகாரம் இந்த சிபாரிசுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.