• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்துதல் (பொலிஸ் நிலையங்களுக்கு வருகை தருவதற்கு நீதவானுக்கு தத்துவமளித்தல்)
- எவரேனும் நீதவான் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்ற அதிகார பிரிவில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் காவலிலுள்ள சந்தேக நபர் ஒருவரை கண்காணிப்பதற்காக குறித்த பொலிஸ் நிலையத்திற்கு ஆகக்குறைந்தது ஒரு (01) மாதத்திற்கு ஒரு தடவையாவது வருகை தருவதற்கு உரிய நீதவானுக்கு அதிகாரத்தினை கையளிக்கும் வகையில் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவையைத் திருத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரைநரினால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.