• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் பாகிஸ்தான் லாகூர் பொருளியல் கல்வி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிகையொன்றைச் செய்துகொள்ளல்
- இருதரப்புக்கும் பரஸ்பரம் நன்மை கிடைக்கப் பெறும் ஆராய்ச்சி ஊடகங்கள், வௌியீடுகள் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்ளல், இரண்டு நிறுவனங்களும் இணைந்தும் தனியாவும் ஆராய்ச்சிக் கருத்திட்டங்களை ஊக்குவித்தல், ஆற்றல் மிக்க மாணவர்களை பரிமாறிக் கொள்ளும் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அனுபவங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நோக்கங்களுடன் கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் பாகிஸ்தான் லாகூர் பொருளியல் கல்வி நிறுவனத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிகையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு பிரேரிக்கப்பட்டுள்ளது. உத்தேச புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில் நிபுணர்கள் குழுவொன்றினால் ஆராயப்பட்டு சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு, வௌிநாட்டு அமைச்சினதும் சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் உடன்பாடும் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கிணங்க, இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.