• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 'விசேட வைப்பு கணக்குகள்' மீது வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- வௌிநாட்டு நாணயங்களை நாட்டிற்கு அனுப்பிவைப்பதை ஊக்குவிப்பதற்காக 'விசேட வைப்பு கணக்குகளை' திறப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்ததோடு, இந்த கணக்குகளில் உள்ள வைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு மேலதிக வட்டியினை செலுத்துவதற்கும் ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, விசேட வைப்புக் கணக்கினை திறப்பதற்கு இடமளித்த கால எல்லையை 2020 ஒக்றோபர் மாதம் 08 ஆம் திகதியிலிருந்து மேலும் ஆறு (06) மாத காலத்திற்கு நீடிக்கும் பொருட்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் 2020‑11‑17 ஆம் திகதியிடப்பட்டதும் 2202/07 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஒழுங்குவிதிகள் வௌியிடப்பட்டுள்ளது. இந்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.