2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
COVID – 19 தொற்றின் மூலம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு நிதி வசதிகளை வழங்கும் கருத்திட்டம் - COVID – 19 தொற்றின் மூலம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா, ஆடை, நிர்மாணிப்பு, வர்த்தக, உற்பத்தி, கமத்தொழில் ஏற்றுமதி மற்றும் சுகாதார சேவை போன்ற துறைகளுக்குத் தேவையான நிதி வழங்கும் பொருட்டு ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கியினால் வழங்குவதற்கு உடன்பட்டுள்ள இலங்கை COVID - 19 எதிர்பாரா அவசர நிலை நெருக்கடி பொறுப்பு வசதியின் கீழ் இலங்கை வங்கியினதும் மக்கள் வங்கியினதும் பங்களிப்புடன் கருத்திட்ட மொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தேச கருத்திட்டத்தின் மூலம் இந்த துறைகளின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்குத் தேவையான திரவத்தன்மை வசதிகளை அதிகரிப் பதற்கு உதவி வழங்கப்படும். இந்தக் கருத்திட்டத்தின் கீழ் இலங்கை வங்கிக்கும் மக்கள் வங்கிக்கும் 90 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் வீதம் 2 கடன் தொகைகள் வழங்கப்படவுள்ளதோடு, இந்த 02 வங்கிகளும் அதன் வாடிக்கை யாளர்களுக்கு துணை கடன் வசதிகளை வழங்கும். இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய உடன்படிக்கைகளை செய்து கொள்வதற்கு அடங்கலாக ஏனைய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |