2021-02-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
150 மெகாவொட் சூரிய சக்தி ஆற்றலைக் கொள்வனவு செய்தல் – நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 150 மெகாவொட் சூரிய சக்தி ஆற்றலைக் கொண்ட மின்நிலையங்களை தாபிக்கும் பொருட்டு பெறுகை செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க 5 பொதிகளின் கீழ் சர்வதேச போட்டி விலைமனு கோரி அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட இணக்கப் பேச்சுக் குழுவின் சிபாரிசுகளுக்கு எதிராக மேன்முறையீடுகள் சமர்ப்பிக்கப்படாதிருந்த கேள்விகளை வழங்கும் போருட்டு 2020 திசெம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய கேள்வி களுக்கு உரியதாக முன்வைக்கப்பட்டிருந்து மேன்முறையீடுகள் கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க 20 வருட காலப்பகுதியில் அநுராதபுரம், ஹபரண, மாத்தறை, காலி, தெனியாய, கொஸ்கம, மத்துகம, பன்னல, மாகோ மற்றும் குருநாகல் நெய்யறி உப நிலையங்கள் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட கேள்விதாரர்களுக்கு உரிய கேள்விகளை வழங்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |