2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் மற்றும் மேற்கு கொள்கலன் முனையம் என்பவற்றை அபிவிருத்தி செய்தலும் கையாள்தலும் - கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்குரியதாக இலங்கை, இந்தியா மற்றும் யப்பான் ஆகிய நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு உடன்படிக்கை யொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையிலுள்ள ஏற்பாடு களுக்கு அமைவாக இந்திய முதலீட்டாளர் ஒருவரினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டு பிரேரிப்பினை மதிப்பிடும் பொருட்டு இணக்கப்பேச்சுக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2020 ஒக்றோபர் மாதம் 26 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த இணக்கப்பேச்சுக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை அடிப்படையாகக் கொண்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பின்வரும் பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
* கிழக்கு கொள்கலன் முனையத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் முழு உரிமையுடன் கொள்கலன் முனையமொன்றாக கையாள்தல். * கொழும்பு துறைமுகத்தை இந்த வலயத்தில் போட்டிகரமான துறைமுகமொன்றாக அபிவிருத்தி செய்யும் நோக்கிலும் இலங்கை அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டுள்ள சருவதேச உடன்படிக்கை களுக்கு அமைவாகவும் இந்திய அரசாங்கத்தினாலும் யப்பான் அரசாங்கத்தினாலும் பெயர் குறித்து நியமிக்கப்படும் தரப்பும் இலங்கை துறைமுக அதிசாரசபையும் இணைந்து அரசாங்க - தனியார் தொழில்முயற்சியொன்றாக அபிவிருத்தி செய்து, செயற்படுத்தி 35 வருடங்களில் மீண்டும் கையளிக்கும் அடிப்படையில் கொழும்பு தெற்குத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுத்தல். |