2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறைச்சாலைகள் உளவுப் பிரிவை மறுசீரமைத்தல் - சிறைச்சாலைகளில் தற்போது இயங்கும் உளவுப் பிரிவை இந்த நோக்கத்திற்காக மாத்திரம் மட்டுப்படுத்தாது, பாதுகாப்பு கடமைகள், விசேட சிறைக்கைதிகள்/ சந்தேக நபர்களின் பாதுகாப்பு, கலவரங்களை ஒடுக்குதல் போன்ற பணிகளுக்காகவும் ஈடுபடுத்த இயலுமாகும் வகையில் மறுசீரமைக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சாதாரண சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் கடமைகளுக்கு மேலதிகமாக கண்டறியப்பட்ட விசேட கடமைகளை கையளிப்பதற்கு இயலுமாகும் வகையில் தற்போது செயற்பட்டு வரும் சிறைச்சாலைகள் உளவுப் பிரிவை "இலங்கை சிறைச்சாலைகள் அவசர செயற்பாட்டுத் தந்திரோபாய படையணி" என மறுசீரமைக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |