• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசளை மானியத் திட்டத்தை திருத்துதல்
- நெற்செய்கைக்காக சுமார் 382,000 மெற்றிக் தொன் பசளை 1.45 மில்லியன் பயனாளிகளுக்கு வருடாந்தம் இலவசமாக வழங்கப்படுகின்றது. அதேபோன்று நெற்செய்கை அல்லாத பயிர்களுக்கு எவ்வித வரையறையும் இன்றி சந்தையில் மானிய பசளையினைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வழிமுறையின் கீழ் நெற்செய்கை அல்லாத பயிர்களுக்கான பசளை மானியமானது குறியிலக்காகக் கொள்ளப்பட்ட விவசாயிகளை விட வௌித் தரப்பினரினால் பயன்படுத்துவதன் காரணமாக தேவையான சந்தர்ப்பங்களில் விவசாயிகளின் பசளைத் தேவைகளை ஈடுசெய்வதற்கு முடியாமற் போகின்றமை தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பசளை மானியத் நிகழ்ச்சித்திட்டத்திற்காக மதிப்பிடப்படும் தொகையைவிட கூடியதொகை வருடாந்தம் ஏற்பதற்கு அரசாங்கத்திற்கு நேரிட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, எதிர்காலத்தில் பசளை மானிய நிகழ்ச்சித்திட்டத்தை பின்வருமாறு நடைமுறைப்படுத்தும் பொருட்டு கமத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நெற் செய்கைக்கான பசளை மானியத் திட்டத்தை நடைமுறையிலுள்ளவாறு ஒரு போகத்திற்கு இரண்டு ஏக்கர் என்னும் உச்சத்திற்கு உட்பட்டு, ஆண்டொன்றில் இரண்டு போகங்களுக்காக பெற்றுக் கொடுத்தல்.

* நெற் செய்கையற்ற ஏனைய பயிர்களுக்காக ஒவ்வொரு பயிரும் உரியதாகும் ஆராய்ச்சி நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்படும் அளவில் வருடத்திற்கு ஆகக்கூடுதலாக 05 ஹெக்டயார் வரை பசளை மானிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பசளை கொள்வனவு செய்வதற்கு இடமளித்தல்.