• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சமுதாயம் சார் சுற்றாடல் முறைமை அணுகலின் மூலம் வனங்கள், கமத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளை ஒருங்கிணைந்ததாக முகாமிக்கும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துதல்
- சுற்றாடல் நட்புறவற்ற காணி பயன்பாட்டு திட்டங்களினால் உயிரின வாழ்க்கைச் சூழல் சமநிலை சீர்குலைவுக்கு உட்பட்டு, தற்போது சமூக, சுற்றாடல், பொருளாதாரம் மற்றும் சுகாதார ரீதியில் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் பல்வேறுபட்ட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதோடு, கமத்தொழில், சுற்றுலா மற்றும் வனங்கள் போன்ற துறைகளில் கூட்டாக மேற்கொள்ளப்படும் நீண்டகால திட்டங்களுடனான நிகழ்ச்சித்திட்டமொன்றின் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 'சமுதாயம் சார் சுற்றாடல் முறைமை அணுகலின் மூலம் வனங்கள், கமத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறைகளை ஒருங்கிணைந்ததாக முகாமிக்கும் கருத்திட்டம்' அநுராதபுரம், மன்னார், வவுனியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மல்வத்துஓயா ஆற்றுப்படுகைக்கு அருகாமையில் முன்னோடி கருத்திட்டமொன்றாக நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப் பட்டுள்ளது. இந்த கருத்திட்டத்திற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் உலகளாவிய சுற்றாடல் வசதிகளின் கீழ் 3.34 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட நிதிக் கொடையொன்றை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த கொடையினைப் பயன்படுத்தி 2021-2024 காலப்பகுதிக்குள் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.