• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வர்த்தக கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு மகாவலி பிரதேசங்களிலுள்ள காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்குதல்
- அந்நிய செலாவணி வௌிநாடுகளுக்கு தேவையற்ற விதத்தில் செல்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டிலே பயிர் செய்யக்கூடிய இனங்காணப்பட்ட உணவுப் பயிர்களின் இறக்குமதியினை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சோள இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதோடு, திரிபோஷ உற்பத்தி மற்றும் விலங்கு உணவு உற்பத்திக்குத் தேவையான சுமார் 250,000 மெற்றிக் தொன் சோளம் உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டியுள்ளது. இதற்கிணங்க, சோளம் பாரிய அளவில் உற்பத்தி செய்வதற்கு உள்நாட்டு கமத்தொழில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இலங்கை மகாவலி அதிகாரசபையின் கீழ் நிறுவகிக்கப்படும் ரம்பகன்ஓய வலயத்தில் இனங்காணப்பட்ட ஒதுக்கப்படாத பயன்பாடு குறைவாகவுள்ள 2,750 ஏக்கர்களை இந்த முதலீட்டாளர்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இனங்காணப்பட்ட உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு (01) வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் உரிய காணித் துண்டுகளை ஒதுக்குவதற்கும் பயிர்ச் செய்கையின் சாதக நிலைமையின் மீது எதிர்காலத்தில் அரசாங்க காணி கட்டளைச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நீண்டகால குத்தகை அடிப்படையில் இந்த முதலீட்டாளர்களுக்கு உரிய காணித் துண்டுகளை வழங்குவதற்கும் நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.