• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பொலிஸ் உத்தியோகத்தரினால் வழங்கப்படும் தற்காலி அனுமதிப் பத்திரத்தை (MTA 37) திருத்துதல்
- மோட்டார் வாகன சட்டத்தின் 135(4) ஆம் பிரிவின் கீழான குற்றமொன்று சம்பந்தமாக விசாரணை செய்யும் போது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் உரிய சாரதி உரிமப் பத்திரத்தை பெற்றுக் கொண்டு தற்காலிகமாக அனுமதிப் பத்திரமொன்று வழங்கப்படும். இதற்கான படிவம் 1951 ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரத்தில் உள்ளடக்கப்படும் விடயங்கள் தற்காலத்திற்கு ஏற்றதாக இல்லாமையினால், தற்கால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் குறித்த இந்த படிவம் திருத்தப்பட்ட இலக்கம் 2144/19 கொண்ட வர்த்மானி அறிவித்தலானது 2019‑10‑09 ஆம் திகதியன்று முன்னாள் போக்குவரத்து என்னும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.