• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களிலுள்ள காணியற்ற உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீளக் குடியமர்த்துதல்
- யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி நிலையங்களிலுள்ள காணியற்ற 381 குடும்பங்களுக்கு பிரதம மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் கீழ் 700,000/- ரூபா செலவில் 20 பேர்ச்சர்ஸ் காணித் துண்டொன்று வீதம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நலன்புரி நிலையங்களிலுள்ள 409 குடும்பங்களில் 233 குடும்பங்கள் காணியற்ற குடும்பங்களாக இனங்காணப் பட்டுள்ளதோடு, அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அருகாமையில் மாற்று காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். ஆயினும் இந்த பிரதேசங்களில் தற்போது நிலவும் காணிகளின் விலையின்படி 700,000/- ரூபாவுக்கு 20 பேர்ச்சர்ஸ் காணித் துண்டினை பெற்றுக் கொள்வது கடினமானதென தெரியவந்துள்ளது. ஆதலால் இந்தத் தொகையினை விஞ்சாதவாறு அரசாங்க விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டிற்கு உட்பட்டு, 10-20 பேர்ச்சர்களுக்கு இடைப்பட்ட காணித் துண்டுகளை தனி உரிமையாளர் களிடமிருந்து கொள்வனவு செய்து இந்த குடும்பங்களுக்கு வழங்குவதற்கும் இதற்கு ஒருங்கிணைவாக வீடுகளை நிர்மாணிப்பதற்கான வழிமுறை யொன்றைத் தயாரித்து இந்த இடம்பெயர்ந்த குடும்பங்களை துரிதமாக மீளக் குடியமர்த்துவதற்கு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.