2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தினை 2022 ஆம் ஆண்டு இலங்கையில் நடாத்துதல் - ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தினை கொழும்பில் நடாத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆளுநர் சபையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் 30 பேர்களுக்கு கூடுதலானவர்களும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் பிரதான சருவதேச வங்கி மற்றும் கம்பனிகளின் நிறைவேற்று உத்தியோகத்தர்களும் உள்நாட்டு வௌிநாட்டு பிரமுகர்களும் ஊடகவியலாளர்களும் அடங்கலாக சுமார் 3,000 தொடக்கம் 4,000 பேர்கள் வரை கலந்து கொள்வர். உத்தேச கூட்டமானது 2022 மே மாதம் 02 ஆம் திகதியிலிருந்து 05 ஆம் திகதிவரை நான்கு (04) நாட்கள் நடாத்தப்படவுள்ளதோடு, இதற்கு ஒருங்கிணைவாக இதற்குரிய பிற கூட்டங்களும் விழாக்களும் நடாத்தப்படவுள்ளன. இதற்கிணங்க, ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தினை 2022 மே மாதம் இலங்கையில் நடாத்துவதற்குத் தேவையான பணிகளைச் செய்வதற்கும் இதற்குரியதாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்வதற்கும் நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |