2021-02-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய எல்லை முகாமைத்துவக் குழுவுக்கு புதிய உறுப்பினர்களை நியமித்தல் - இலங்கையில் தேசிய எல்லை முகாமைத்துவத்தின் சகல துறைகள் தொடர்பிலும் உயர்மட்ட அவதானம், முன்னுரிமை மற்றும் குறியிலக்கு என்பவற்றை மதிப்பிடுவதற்காக பொறுப்புக் கூறும் அரசாங்கத்தின் மையக்கூறொன்றாக செயலாற்றுவதற்கு 'தேசிய எல்லை முகாமைத்துவ குழுவானது' தாபிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் எல்லை முகாமைத்துவத்துடன் சம்பந்தப்பட்ட ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் உத்தியோகபூர்வமாக இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலதிகமாக எல்லை முகாமைத்துவத்தின் போது முக்கிய நிறுவனமொன்றான இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவரையும் முப்படைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு பணிகள் கையளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பதவியணி பிரதானியையும் கடற்றொழில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளரையும் இந்த குழுவின் புதிய உறுப்பினர்களாக நியமிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |