2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 500,000 AstraZeneca’s COVISHIELD Vaccine தடுப்பூசிகளை வழங்குதல் - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால உறவு மற்றும் கடந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் COVID – 19 தொற்று நிலைமைக்கு முகங்கொடுக்கும் போது இரு நாடுகளுக்கிடையில் நிலவிய ஒத்துழைப்பு என்பவற்றினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 500,000 AstraZeneca’s COVISHIELD தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதெனவும் இந்த தடுப்பூசி தொகையானது இந்த மாதம் 28 ஆம் திகதியன்று நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதெனவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அறிவித்துள்ளமை பற்றி மாண்புமிகு பிரதம அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதோடு, இது சம்பந்தமாக இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களையும் நன்றி அறிதலையும் தெரிவிப்பதற்கு அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது. |