• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குருவிட்ட எரத்ன சிவனொளிபாதமலை வீதி அபிவிருத்தி
- சிவனொளிபாதமலைக்கு வருகைதரும் பக்தர்கள் பயன்படுத்தும் பிரதான மூன்று (03) வீதிகளில் வீதியொன்றான குருவிட்ட – எரத்ன வீதி சிவனொளிபாத மலைக்குச் செல்லும் காலத்தில் ஒரு இலட்சம் பேருக்கு மேலானவர்களினால் பயன்படுத்தப்படும். இந்த வீதியில் இயற்கையாகவே அமைந்துள்ள படிகள் நீண்ட காலமாக புனரமைக்கப்படாமையினால் பக்தர்கள் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஆதலால், குருவிட்ட – எரத்ன வீதியில் இனங்காணப்பட்ட இடங்களை புகையிரத பாதைகளின் திருத்த வேலைகளின் போது அப்புறப்படுத்தும் சிலிப்பர் கிடைக்கட்டைகளை பயன்படுத்தி புனரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.