2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
புளுமென்டால் பிரதேசத்தில் உத்தேச துறைமுகம் சார்ந்த சேவை வழங்கும் பிரிவை அபிவிருத்தி செய்தல் – கொழும்பு துறைமுகத்தின் போட்டித் தன்மையை அதிகரிப்பதற்கு வினைத்திறனுடன்கூடிய கேள்விக்கு ஏற்றவாறு கொழும்பு துறைமுகத்தின் சேவை வழங்கும் பணிகளை அபிவிருத்தி செய்யும் அவசரத் தேவை இலங்கை துறைமுக அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க புளுமென்டால் பிரதேசத்தில் நவீன வசதிகளுடன்கூடிய துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்கும் பிரிவொன்றை தாபிப்பதற்கு இலங்கை துறைமுக அதிகாரசபை எதிர்பார்க்கின்றது. இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக பகுதி கொள்கலன், முழுமையான கொள்கலன், பல்வேறு நாடுகளுக்கு சொந்தமான மீள் ஏற்றுமதி கொள்கலன், குளிரூட்டியுடனான கொள்கலன், கப்பற் சரக்கு கையாள்கை மற்றும் பிற துறைமுகம் சார்ந்த சேவைகளை வழங்குவதற்காக பாரிய களஞ்சிய தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நிர்மாணித்து, செயற்படுத்தி, கையளிக்கும் திட்டத்தின் கீழ் அரசாங்க – தனியார் கூட்டு கருத்திட்டமொன்றாக உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பொருத்தமான முதலீட்டாளர் ஒருவரை / முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கு இயலுமாகும் வகையில் பிரேரிப்புகளை கோருவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |