2021-01-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீதிமன்ற நிர்மாணிப்புகளை திட்டமிடுவதற்காக மதியுரைச் சேவைகளைப் பெற்றுக் கொள்தல் – நீதியை நிலை நாட்டுவதற்காக நாட்டில் நடைமுறையிலுள்ள நீதிமன்றங்களில் தற்போது பாரிய எண்ணிக்கையில் வழக்குகள் குவிந்துள்ளன. இதற்கு மாற்று வழியாக நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கு ஒருங்கிணைவாக நீதிமன்றங்களில் ஏனைய வசதிகளை வழங்க வேண்டியுள்ளதோடு, எதிர்வரும் மூன்று 03 வருட காலப்பகுதிக்குள் 100 நீதிமன்றங்களை நாட்டில் நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்கீழ் பல்மாடி நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணிப்பதற்கும் அதேபோன்று தற்போதுள்ள கட்டடங்களை விருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நீதிமன்ற கட்டடங்களை நிர்மாணிப்பதில் அனுபவமுள்ள மத்திய பொறியியல் உசாதுணை பணியகத்திடமிருந்து தேவையான ஆலோசனை சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |