2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஆட்கள் மீண்டும் வருதல் மற்றும் அவர்களை மீளப் பொறுப்பேற்றல் தொடர்பாக அவுஸ்திரேலிய பொது நலவாயத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை – அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் குடிவரவு சட்டத்தை மீறி தங்கியிருப்பவர்களை இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கி புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்து கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம் தாம் வசித்த நாட்டுக்கு பாதுகாப்பான விதத்தில் மீளச் செல்வதனை உறுதிப்படுத்துகின்றது. இதற்கிணங்க அவுஸ்திரேலிய பொது நலவாயத்திற்கும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசிற்கும் இடையில் ஆட்கள் மீண்டும் வருதல் மற்றும் அவர்களை மீளப் பொறுப்பேற்றல் தொடர்பில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரும் தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |