2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசியல் ரீதியிலான பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் செயற்படுத்துதல் - 2015 சனவரி மாதம் 08 ஆம் திகதியிலிருந்து 2019 நவெம்பர் மாதம் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் பதவி வகித்த அரசாங்க உத்தியோகத்தர்கள், அரசாங்க கூட்டுத்தாபனங்களின் ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் சேவை உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கு இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கையானது அதிமேதகைய சனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் இந்த அறிக்கையிலுள்ள தீர்மானங்களையும் சிபாரிசுகளையும் செயற்படுத்தும் பொருட்டு தேவையான நடவடிக்கையினை எடுப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |