2021-01-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
சிறிய தீவுகள் கலப்பு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளின் நிர்மாணிப்பு – இலங்கை மின்சார சபையினால் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியத்தின் கீழ் "மின்சார விநியோகத்தின் நம்பகத் தன்மையை மேம்படுத்துவதற்கு ஒத்தாசை நல்கும் கருத்திட்டமானது" நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் கீழ் தற்போதைய மின்சார வலையமைப்பின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு இலகுவாக கிடைக்கக் கூடிய வலுசக்தி வளங்களை பயன்படுத்தி நயினாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைதீவு என்பவற்றுக்கு அருகாமையில் கலப்பு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி முறைமைகளை நிர்மாணிப்பதற்கு சர்வதேச போட்டிக் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை சீனாவின் M/s Sinosoar – Etechwin Joint Venture நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |