• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள அரசாங்க காணியில் வர்த்தக நிலையமொன்றைத் தாபிக்கும் கருத்திட்ட
– அரசாங்கத்தின் "சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தின் மூலம் உயர்கல்வி கற்று பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடுத்தவணைக்கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த பின்ணணியில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அவர்களுக்கு மஹபொல உயர்கல்வி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி வசதிகளுக்காக ஏற்கப்படும் செலவும் அதிகரிக்கும். மஹபொல உயர்கல்வி நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினை அதிகரித்துக் கொள்வதற்கும் நீண்டகால நிலையான வருமான வழியின் ஊடாக வருமானத்தை பெற்றுக் கொள்வதற்கும் முதலீட்டின் மூலம் நேரடி அபிவிருத்தியினை ஏற்படுத்துவதற்கும் நோக்காக கொண்டு குறித்த புலமைப்பரிசில் நிதியத்திலுள்ள நிதியினை வேறு முதலீடுகள் ஊடாக முதலீடு செய்வதன்பால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அநுராதபுரம் மாவட்டத்தில் மிஹிந்தலை ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள சுமார் 300 ஏக்கர் அரசாங்க காணியில் வர்த்தக நிலையமொன்றைத் தாபிக்கும் கருத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உரியதாக கூட்டுத் திட்டமொன்றை தயாரிக்கும் பொருட்டு உரிய ஏனைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் குழுவொன்றை நியமிப்பதற்குமாக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.