• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிரிவெனா அபிவிருத்தி நிதிய சட்டத்தை வரைதல்
- பிரிவெனா கல்விக்காக வருடாந்தம் அரசாங்கத்தினால் சுமார் 4,500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுகின்றது. தற்போது மகா பிரிவெனாக்கள், ஆரம்ப பிரிவெனாக்கள், வித்தியாயத்தன பிரிவெனாக்கள், இருமொழி பிரிவெனாக்கள், விசேட பிரிவெனாக்கள் மற்றும் பௌத்த சீலமாத்தா கல்வி நிறுவனங்கள் என பிரிவெனாக்கள் வகுப்பீடு செய்து பதிவுசெய்யப்பட்டுள்ளதோடு, இந்த நிறுவனங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 62,240 ஆகும் பிரிவெனா கல்வியை சிறந்த முறையில் முறைப்படுத்தி நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் பிரிவெனா அபிவிருத்தி நிதியச்சட்டம் என்னும் நிதியமொன்றை தாபிப்பதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.