• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துதல்
– 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் பல நன்மைகள் கிடைத்துள்ளன. ஆயினும் இந்த சட்டத்தின் 10 ஆம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் பிணை பெற்றுக் கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு கோரிக்கையொன்று முன்வைக்கப்பட வேண்டுமென்பதோடு, இதன் காரணமாக சந்தேக நபர்களுக்கும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் கடும் தாக்கத்திற்கு ஆளாகவேண்டி நேரிட்டுள்ளது. முக்கியமாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பில் உள்ளதன் காரணமாக தூர பிரதேசத்தில் வசிக்கும் சந்தேகநபர்களுக்குரிய பிணை விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது இடையூறுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளமையினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குப் பதிலாக பிணை வழங்கும் நீதிமன்றமாக மேல் நீதிமன்றமென திருத்துவது பொருத்தமானதென தெரியவந்துள்ளது. அதேபோன்று "வழக்கு விசாரணை முடிவுறும் வரை சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கவேண்டும்" என்னும் ஏற்பாட்டினை "நீதிமன்றத்தினால் நியாயமானதெனக் கருதக்கூடிய காலப்பகுதிக்கு விளக்கமறியலில் வைத்தல் வேண்டும்" என திருத்துவது பொருத்தமானதெனவும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.