2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துதல் - 1957 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தை திருத்துவதற்கு 2016 மே மாதம் 10 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க சட்டவரை நரினால் சட்டமூலமொன்று தயாரிக்கப்படுள்ளதோடு, குறித்த சட்டமூலத்தில் மேலும் பின்வரும் ஏற்பாடுகளை உள்ளடக்கி திருத்தும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது:
* தேயிலை கைத்தொழிற்சாலைகளில் உற்பத்தி நடவடிக்கையின் போது வகைப்படுத்தலின் பின்னர் அப்புறப்படுத்தும் தேயிலை சார்பில் "மீள பண்படுத்த தக்க தேயிலை" என்னும் பொருள்கோடலை இந்த சட்டத்தில் சேர்ப்பதற்கும்; * மீள பண்படுத்த தக்க தேயிலையிலிருந்து மேலும் தேயிலை பெறப்பட்ட பிறகு எஞ்சியிருப்பதை "கழிவு தேயிலை" என குறிப்பிடுவதற்கும்; அத்துடன் * தேயிலை பதனிடுபவர்களை பதிவு செய்தல், அவர்களுக்கு அனுமதி பத்திரம் வழங்குதல் மற்றும் நிர்வகித்தல் அடங்கலாக அவர்களுக்குரிய சட்ட ஏற்பாடுகளை சேர்த்தல். |