• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1950 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணி கொள்ளல் சட்டத்தை திருத்துதல்
– தற்போது நடைமுறையிலுள்ள 1950 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணி கொள்ளல் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கும் போது கூடிய காலம் எடுக்கின்றதன் காரணமாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பல்வேறுபட்ட துரித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளது. இந்த சட்டத்திலுள்ள ஏற்பாடுகளை பின்பற்றி சுவீகரிக்கப்படும் காணி சார்பில் நட்டஈடு செலுத்தும் போது ஒரே மாதிரியான வழிமுறை பின்பற்றப்படாமை மற்றும் நட்டஈடு செலுத்துவதற்கு நீண்டகாலம் எடுக்கின்றமை போன்ற விடயங்கள் இவற்றுள் முக்கியமான வையாகும். ஆதலால் காணி சுவீகரித்தல் செயற்பாட்டிற்கு எடுக்கப்படும் காலத்தினை குறைத்து எளிமையான வழிமுறையொன்றின் கீழ் காணி சுவீகரிப்பதற்கும் ஒரே மாதிரயான வழிமுறையின் கீழ் நட்டஈடு செலுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் இந்த சட்டத்தை தற்கால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு காணி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.