2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பெருந்தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக கம்பனிகளின் கீழ் நிருவகிக்கப்படும் அரசாங்க பெருந்தோட்டங்களிலிருந்து காணிகளை பெற்றுக் கொள்ள – தற்போதுள்ள தோட்ட பாடசாலைகளிலிருந்து ஏழு (07) மாவட்டங்களுக்கு சொந்தமான 354 தோட்ட பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு உரிய பாடசாலைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பெருந்தோட்ட கம்பனிகளினால் நிருவகிக்கப்படும் அரசாங்க பெருந்தோட்டங்களில் குறைந்த பயன்பாட்டுடன்கூடிய காணிகளிலிருந்து ஆகக்கூடுதலாக இரண்டு (02) ஏக்கர்கள் வரை இந்த பாடசாலைகளுக்கு ஒதுக்குவதற்கு 2018 ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலைகளுக்கு மேலதிகமாக மேலும் 491 பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளதோடு, இந்த பாடசாலைகளினதும் தேவைகளுக்கேற்ப ஆகக்கூடுதலாக இரண்டு (02) ஏக்கர்கள் வீதம் ஒதுக்கி கொள்ளவேண்டியுள்ளது. இதற்கிணங்க இந்த பாடசாலைகளுக்கு பெருந்தோட்ட கம்பனிகளினால் நிருவகிக்கப்படும் அரசாங்க பெருந்தோட்டங்களிலிருந்து காணித் துண்டுகளை குறித்தொதுக்கிக் கொள்ளும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |