• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக உடன்பாடு காணப்பட்ட சலுகை காலப்பகுதியை நீடித்த
- COVID - 19 தொற்று காரணமாக எழுந்துள்ள நெருக்கடியின் மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது சம்பந்தமாக தொழில் கொள்வோர், தொழிற்சங்கங்கள், தேசிய தொழிலாளர் மதியுரைச்சபை, தொழில் அமைச்சு மற்றும் தொழில் திணைக்களம் என்பவற்றின் பங்குபற்றுதலுடன் தாபிக்கப் பட்டுள்ள செயலணியின் கூட்டத்தில் ஊழியர்களின் தொழிலை இல்லா தொழிக்காமல் அவ்வாறே பேணுதல், சகல ஊழியர்களும் சேவையாற்றும் விதத்தில் சமமான வாய்ப்பினை வழங்குதல், ஊழியர்கள் வீடுகளில் தங்கியிருக்க வேண்டுமாயின் இறுதியாக முழுச் சம்பளம் செலுத்தப்பட்ட மாதாந்த சம்பளத்தின் 50 சதவீதம் அல்லது 14,500/- ரூபா என்னும் இரண்டில் பயனுள்ள தொகையினை வழங்குதல் மற்றும் இந்த சம்பளத்திற்கு தொழில் கொள்வோர் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் பங்களிப்பு தொகையினை செலுத்துதல் போன்ற சலுகைகள் 2020 திசெம்பர் மாதம் 31 ஆம் திகதிவரை வழங்குவதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது.

COVID - 19 தொற்று காரணமாக பயணத்தடை மற்றும் விமானங்களின் மட்டுப்படுத்துகை என்பவற்றினால் சுற்றுலாத் துறை கடும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளமை பற்றியும் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் COVID - 19 தொற்று காரணமாக தமது பணிகளை நடாத்திச் செல்ல முடியாமற்போயுள்ள ஏனைய துறைகள் சார்ந்த நிறுவனங்கள் சார்பிலும் மேற்போந்த சலுகைகளை 2021 மார்ச் மாதம் இறுதிவரை தொடர்ந்தும் நீடிக்கும் பொருட்டு தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் உடன்பாட்டினை தெரிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.