• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிறுவனங்களுடனான மனிதாபிமான ரீதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிகழ்ச்சித்திட்டம்
– 2002ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் மனிதாபிமான ரீதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றதோடு, தற்போது நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் வௌிநாட்டு அரச சார்பற்ற இரண்டு (02) அமைப்புகளும் உள்நாட்டு இரண்டு (02) அரச சார்பற்ற அமைப்புகளும் ஈடுபட்டடுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக இலங்கை தரைப்படையின் மனிதாபிமான ரீதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவும் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புகளின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டல்கள் தேசிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிலையத்தினால் நிறைவேற்றப் படுகின்றது. இதுவரை 197.66 சதுர கிலோமீற்றர் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் 15.39 சதுர கிலோமீற்றர்களுக்கான பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இந்த செயற்பாடு சம்பந்தமாக தேசிய நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நிலையமானது நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் உள்நாட்டு வௌிநாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களுடன் வருடாந்தம் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை செய்து கொள்வதோடு, 2023 ஆம் ஆண்டுவரை குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்குரியதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.