2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2020‑11‑29 ஆம் திகதியன்று மஹர சிறைச்சாலையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் விரிவான அறிக்கை - மஹர சிறைச்சாலையில் 2020‑11‑29 ஆம் திகதியன்று நிகழ்ந்த கலவரம் தொடர்பில் முறையான விசாரணையொன்றை மேற்கொள்வதற்காக நீதி அமைச்சரினால் ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கையின் மூலம் சிறைச்சாலைகளில் காணப்படும் இட நெருக்கடிகளைத் தவிர்த்தல், கைதிகளின் நலனோம்பல் மற்றும் சிறைச்சாலை நிருவாகம் போன்ற மூன்று பிரதான விடயங்களின் கீழ் சிபாரிசுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையிலுள்ள தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |