• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உத்தேச கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டம்
- 'சுபீட்சத்தின் நோக்கு' என்னும் தற்போதை அரசாங்க கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக கொழும்பு துறைமுக நகரத்தை இந்திய துணைக் கண்டத்திற்கும் தெற்காசியாவுக்கும் சேவை வழங்கும் விரிவான விடய பரப்பினைக் கொண்ட விசேட பொருளாதார வலயமொன்றாகவும் சேவை பொருளாதாரத்தை குறியிலக்காகக் கொண்ட விசேட வலய மத்திய நிலையமொன்றாகவும் மாற்றுவதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் பொருட்டு உரிய முறையில் கட்டமைக்கப்பட்ட, போட்டிகரமான சட்ட, குத்தகை, ஒழுங்குறுத்துகை மற்றும் பிணக்குகளைத் தீர்க்கும் பொறிமுறையின் மூலம் முதலீட்டாளர்கள், தொழில்முயற்சியாளர்கள், புத்தாக்குநர்கள், கம்பனிகள், நிதி நிறுவனங்கள் என்பவற்றை ஈர்த்து துபாய், சிங்கப்பூர், ஹொங்கொங் போன்ற முதலீட்டு கேந்திர நிலையங்களுடன் போட்டிகரமான ரீதியில் செயலாற்றக்கூடிய விதத்தில் வசதிகளை வழங்கும் சூழலை உருவாக்க வேண்டியுள்ளது. இதற்கிணங்க, தேசிய தேவைகள் மற்றும் சருவதேச முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் இயலுமாகும் வகையில் அரசாங்கம் எதிர்பார்க்கும் கட்டமைப்புக்கு ஏற்ற விதத்தில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை வரைவதற்காக சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.