2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடைவதற்காக வழிப்படுத்தல் குழுவொன்றை நியமித்தல் - 2015 செப்ரெம்பர் மாதத்தில் நடாத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத்தொடரில் இலங்கையும் அடங்கலாக 193 நாடுகளினால் நிலைபேறுடைய அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சிநிரல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 17 நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளில் பெரும்பாலான எண்ணிக்கையை அடைவதற்கான சவால்கள் நிலவுகின்றதென 2020 ஆம் ஆண்டிற்கான உலக நிலைபேறுடைய அபிவிருத்தி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையினை ஆராய்வதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சரின் உடன்பாட்டின் மீது வௌிநாட்டு அமைச்சரினால் செயற்பாட்டுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை அடையும் செயற்பாட்டினை கையாள்வதற்கு உயர் அரசியல் தலைமை இருக்கவேண்டிய முக்கியத்துவம் இந்தக் குழுவினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை நடைமுறைப்படுத்தும் செயற்பாட்டிற்கு தலைமையினை வழங்குவதற்கும் வழிகாட்டுவதற்கும் மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் உரிய அமைச்சர்கள் / இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் உரிய அமைச்சுக்களின் செயலாளர்களைக் கொண்ட வழிப்படுத்தல் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் வெளிநாட்டு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டுப் பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |