• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-01-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இனங்காணப்பட்ட கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதியினை கொரிய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு கொரிய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் பணிக் கட்டமைப்பு உடன்பாடு
- இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார ஒத்துழைப்பினை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இரு தரப்பினரினாலும் உடன்பாடு காணப்படும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 2017 ஆம் ஆண்டில் கொரிய குடியரசுக்கும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் இடையில் பணிக் கட்டமைப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதோடு, இது 2019 ஆம் ஆண்டில் முடிவுற்றுள்ளது. 2020 - 2022 காலப் பகுதியில் இனங்காணப்படும் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதறகாக 500 மில்லியன் டொலர்களை விஞ்சாத கொரிய வொன்களை வழங்குவதற்கு கொரிய குடியரசு உடன்பாட்டினைத் தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இரு தரப்புக்கும் இடையில் புதிய பணிக்கட்டமைப்பு உடன்பாட்டினைச் செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.