• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கண்டி கைத்தொழில் பேட்டையை விரிவுபடுத்துத
- 1994 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இலங்கை முதலீட்டுச் சபையின் கண்டி கைத்தொழில் பேட்டை 195 ஏக்கர்களைக் கொண்டுள்ளதோடு, அதில் கைத்தொழில்களைத் தாபிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய காணியின் அளவு சுமார் 120 ஏக்கர்களாகும். இந்த காணித் துண்டுகள் ஏற்கனவே 26 கைத்தொழில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த கைத்தொழில் பேட்டைக்கு அருகாமையிலுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான சுமார் 5.65 ஹெக்டயார் காணித் துண்டை கைத்தொழில் பேட்டையை விரிவுபடுத்துவதற்காக பயன்படுத்துவதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் காணித் துண்டை இறையிலி கொடையொன்றாக இலங்கை முதலீட்டுச் சபைக்கு உடைமையாக்கும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.