2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பேண்தகு சுற்றாடல் முகாமைத்துவத்துக்கென அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுவொன்றைத் தாபித்தல் - 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக பேண்தகு சுற்றாடல் கொள்கையொன்றை நாட்டில் நடைமுறைப்படுத்துவது சுற்றாடல் அமைச்சு உட்பட சுற்றாடல் என்னும் விடயத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களின் முன்னுரிமை பொறுப்பாகும். இந்தப் பணியினை நிறைவேற்றும் போதும் அதேபோன்று மக்களுக்கு அறியச் செய்விப்பதற்காகவும் அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் முன்வைக்கப்படும் விடயங்கள் தொடர்பில் செம்மையான தகவல்களை முன்வைப்பதற்கும் சுற்றாடல் என்னும் விடயத்துடன் தொடர்புபட்ட சகல நிறுவனங்களும் கூட்டாக செயலாற்றும் தேவையும் தெரியவந்துள்ளது. இதற்கிணங்க, உரிய அமைச்சுக்களினதும் நிறுவனங்களினதும் பங்களிப்புடன் சுற்றாடல் அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் அமைச்சுக்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுவொன்றைத் தாபிக்கும் பொருட்டு சுற்றாடல் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |