2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வர்த்தக பரிகாரங்கள் சட்டங்களை அமுலாக்குதல் - உள்ளூர் கைத்தொழில்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நியாயமற்ற வர்த்தக பாவனை மற்றும் உள்ளூர் கைத்தொழில்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய விதத்தில் பாரிய அளவில் பொருட்களை இறக்குமதி செய்தல் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 2018 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க எதிரிடையான கழிவுப் பொருட்களை இடும் இடம், சரிசம வலுவுடன் எதிர்ச் செயலாற்றுதல் சட்டம் மற்றும் 2018 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் சட்டம் என்பன அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தும் திகதி விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரினால் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட வேண்டுமென்பதோடு, இந்த சட்டங்கள் 2020 ஒக்றோபர் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உள்ளூர் கைத்தொழில் முகங்கொடுக்க நேரிடும் சீரற்ற நிலைமைகளை தவிரத்துக் கொள்ளும் பொருட்டு இந்த இரண்டு சட்டங்களின் கீழும் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் தகுதிவாய்ந்த அதிகாரியாக வர்த்தக பணிப்பாளர் அதிபதியானவருக்கு செயலாற்றும் சாத்தியம் நிலவுகின்றதென வர்த்தக அமைச்சரினாலும் வௌிநாட்டு அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட தகலவ்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. |