• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பிங்கிரிய தேவகிரி ரஜமஹ விகாரயை புண்ணிய பூமியாக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்தல்
- குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள பிங்கிரிய தேவகிரி ரஜமஹ விகாரயின் வரலாற்றுப் பின்னணியானது கி.மு.204-207 காலம் முழுவதும் நிலவியதோடு, இந்த விகாரை பிரதேசத்தில் அழியாத தொல்பொருளியல் பெறுமதிமிக்க சின்னங்கள் பல இனங்காணப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டின் தேசிய வெசாக் விழாவுக்கு ஒருங்கிணைவாக இந்த விகாரை சார்பில் அபிவிருத்தி திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு தேசிய பௌதிக திட்டமிடல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டதோடு, இதன்கீழ் சில அபிவிருத்தி பணிகள் இந்த திணைக்களத்தின் ஆலோசனையின் பேரில் புத்தசாசன அமைச்சின் நிதி ஏற்பாடுகளின் மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த அபிவிருத்தி திட்டத்தினை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் 'பிங்கிரிய தேவகிரி ரஜமஹ விகாரை பிரதேசத்தை' 1946 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க நகர, கிராம நிர்மாண கட்டளைச்சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பிரகடனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.