2020-12-21 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கையின் நீதித்துறை ஒத்துழைப்பு கருத்திட்டம் - சேவை வழங்கும் தரம் மற்றும் சேவை பெற்றுக் கொள்வதற்கான அணுகுமுறை என்பவற்றை விருத்தி செய்வதன் மூலம் இலங்கையில் விருத்தி செய்யப்பட்ட செயற்பொறுப்பு மிக்க முறைமையொன்றைத் தாபிக்கும் நோக்கில் 'இலங்கையின் நீதித்துறை ஒத்துழைப்பு கருத்திட்டம்' என்னும் பெயரில் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு 18 மில்லியன் யூரோக்கள் கொண்ட மானியமொன்றை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இந்த கருத்திட்டம் நீதி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படுவதோடு, மொத்த மதிப்பீட்டு செலவு 19.27 மில்லியன் யூரோக்களாகும். ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படும் மானியத்திற்கு மேலதிகமாக மீதித் தொகையானது ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (UNDP) போன்ற நிறுவனங்களினால் வழங்கப்படும். இதற்கிணங்க, குறித்த மானியத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் மானிய உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்ளும் பொருட்டு நிதி அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |